Tuesday, April 27, 2010

இன்னும் இருக்கிறாய்....
கல்லாய் விழுந்திருந்தால் பொருக்கி இருப்பேன்
மண்ணாய் படிந்திருந்தால் அள்ளி இருப்பேன்
நீயோ நெஞ்சிற்குள் புழுதியாய் படர்ந்தாய்
வெளியேற வழி என்ன வெடித்து சிதறுவதா

"அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"
முதல் சந்திப்பில் ராமாயணம் கற்றேன்
"எதை கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு"
இறுதி சந்திப்பில் கீதை கற்றேன்

"இன்னும் எதற்காக வாழ்கிறாய்"
மனசாட்சியின் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதில்
"இறப்பிற்கு பிறகு பிறப்பு உண்டா"
விஞ்ஞானத்தின் கேள்விக்கு நான் மட்டுமே பதில்

Labels:

0 Comments:

Post a Comment

<< Home