Saturday, January 09, 2016

இரும்பு கேட் உம் பச்சை கேட் உம்

கடைக்கு உள்ளே நான்... வெளியே நீ...
கண் சிமிட்டி கேட்பாய்... ஒரு ஸ்ட்ரிப் theoasthalin குடுங்க  
அன்று முதல் உன் பெயர் "theoasthalin" ஆனது...
"theoasthalin...theoasthalin"... கடையில், கோவில் வாசலில், கடை தெருவில்...
கண்ட இடமெல்லாம்... உன்னை கண்ட இடமெல்லாம்... என் தேசிய கீதமானது...
ஒரு நாள் நடு தெருவில், உன் முகம் எனை முறைத்தது...
அந்தி வானம் சிவந்தது போல்...
என் பேரு ஒன்னும் "theoasthalin" இல்ல "திவ்யா"... 
காதில் விழுந்தது திவ்யமாய்.
சொல்லிவிட்டு ஒரு நமட்டு புன்னகை...
அந்தி வானம் நடுவே பூத்த வெள்ளி நிலவாய்...
அன்று உனக்கு பதினான்கு...எனக்கு பதினாறு...

என் வீட்டு இரும்பு gate உம், உன் வீட்டு பச்சை gate உம்... உறவாட தொடங்கியது...
ஒரு குனிந்த தலை என் வீட்டை கடக்கும்...
அது என்னை திரும்பி பார்த்தால், என் பின்னே யாரும் இல்லை...
குனிந்தே சென்றால், எங்கோ யாரோ நிற்பார்கள்...
பச்சை gate மூடும் முன்னே, ஒரு சந்தன தண்டு வெளியே வந்து கையசைக்கும்...
சேட்டை கொஞ்சம் அதிகம் என்றால், என் முதுகில் அடி விழும்
"அந்த சிரிக்கி மவ, நான் நிக்கறது தெரிஞ்சே இப்படி பண்றா"
அக்கா, சித்தி, சி.அம்மா இப்படி யாரோ ஒரு குரல் கேட்கும்...

தேர் திருவிழா கலைக்கட்டும்,
நீ பாவாடை தாவணியில் பவனி வருகையில்..
நீயும் நானும் வடம் பிடித்து இழுத்தால்,
நடராஜர் தேர் நடனம் ஆடும்...
நீ கண்மூடி கடவுளை வணங்குவாய்,
நான் குங்குமம் எடுத்து உன் நெற்றியில் வைப்பேன்,
ஒன்றுமே நடக்காதவளாய் கண் திறப்பாய்,
சிவகாமி அம்மன் புன்னகைப்பாள், தன் கரம் உயர்த்தி ஆசியோடு....
தெய்வீக காதல் அது....

கோவில், கடை, கடைத்தெரு, ஸ்கூல் ground,
நம்மை சந்திக்காத செங்கல் இல்லை...
மார்கழி கோலங்கள் கண்டதை விட,
நம் தெரு நம் காலடி கோலங்கள் கண்டது தான் அதிகம்...
யாருமே எதிர்ப்பு இல்லை,
இருப்பினும் யார் கண் பட்டதோ தெரியவில்லை.
இரும்பு கேட் இல் தனியாய் நான்,
பச்சை கேட் இல் நீ ஒரு குழந்தை உடன்...
இப்பொழுது உன் குழந்தை எனக்கு கை அசைக்க....
கை அசைத்து, இதழ் சிரித்து, இதயம் நொறுங்கி, நான்...





0 Comments:

Post a Comment

<< Home