அன்னையர் தினம்
எனக்கு மட்டும் ஏனோ கண்ணில் அடிக்கடி தூசி விழும்,
உன் நினைவுகள் எந்நேரமும் நெஞ்சை வருடி செல்லும் ...
என்றாவது நிஜத்தில் தூசி விழுந்தால்,
நீ நெற்றியில் கை வைத்து, விபூதி ஊதிய ஞாபகம்...
யாரோ யாரையோ கண்ணு என்று அழைத்தால்,
இன்னும் திரும்பி பார்க்கும் நான்...
ஊரே தர்த்திரியம் என்று சொல்லும் போது,
வெள்ளி செவ்வாய் மாறாமல் த்ரிழ்டி சுற்றிய நீ...
இறுபது வயது முன்பு நீ கொடுத்த கடைசி முத்தம்,
இன்னும் நெற்றி பொட்டில் ஈரம் மாறாமல்...
கடவுளின் படைப்பில் இப்படி ஒரு அதிசியம்,
அறுபட்ட பின்னும், தொடர்பிலேயே இருக்கும் என் தொப்புள் கொடி...
உடலை மட்டும் உன்னிடம் இருந்து பிரிக்க தெரிந்த இறைவன்,
உயிரை மட்டும் உன்னிடமே விட்டு விடுவது ஏனோ...
முகம் துடைத்த உன் முந்தானை வாசம் தீரவே
இன்னும் மூன்று ஜென்மம் வேண்டுமே ...
உன்னை இரு முறை தான் நினைக்கிறேன்,
மூச்சு இழுக்கும் போது ஒரு முறையும், விடும் போது ஒரு முறையும்...
நித்தம் நித்தம் கொண்டாட வேண்டிய உன்னை
ஒத்தை நாளில் எப்படி சுருக்குவது...
அன்னையர் தினம் கண்டுபிடித்தவன் ஒரு முட்டாள்,
கடைபிடிப்பவன் மடையன்...
0 Comments:
Post a Comment
<< Home