Saturday, January 17, 2009

அகரம்


அகர முதல எழுத்தெல்லாம் அம்மா

தானே முதற்றே உலகு

- திருக்குறள் கற்ற முதல் நாளில் திருவள்ளுவரை திட்டிய ஞாபகம்


தமிழில் அ - அம்மா என்று படித்துவிட்டு

ஆங்கிலத்தில் A - ஆப்பிள் என்று படித்த போது

வெள்ளையனை திட்டிய ஞாபகம்


சுவரில் ஒரு சித்திரம் காட்டி "கடவுள்" என்று கைக்கூப்பிய போது

உன்னையே திட்டிய ஞாபகம்


தலை நிறைய படித்த போதும்

தோல் மீறி வளர்ந்த பின்பும்

கை நிறைய சம்பாரித்த பின்னும்

கடல் தாண்டி கடந்த பின்னும்

உன் வாயால் "நல்லா சாப்பிடு, உடம்ப பார்த்துக்க"

என்ற ஒரு வரி மட்டுமே

இரண்டு வயது தொடங்கி இருபதுகளை கடந்த பின்னும்


கடவுள் இருப்பானா இல்லையா தெரியவில்லை

இல்லையென்றால், நீயே கடவுள்....

இருந்துவிட்டால், நீ அவனுக்கும் மேல்....





Labels: