அன்றைய தீபாவளி... இன்று தீப வலியாய்...
அன்றைய தீபாவளி... இன்று தீப வலியாய்...
விறகு அடுப்பில் கொதித்து முடிந்த வெந்நீர் பாணை...
உச்சந்தலையில் வைக்கப்பட்ட நல்லெண்ணெய்...
அன்று மட்டும் கண் எரிக்காத சீக்காய் பொடி...
தின்று தின்று தீராமலே நிற்கும் பலகார அண்டா...
5 மணிக்கே தயாராகி விட்ட சுழியமும், பணியாரமும்...
சாமி அறையில் எரியும் கற்பூரம் அணையும் முன்,
வெடிக்கப்படும் எங்கள் தெருவின் முதல் சரவெடி...
அரை மணிக்கு ஒரு முறை மாற்றப்படும்,
சொந்தம் முழுதும் வாங்கி கொடுத்த புத்தாடைகள்...
அப்படி என்ன புதையல் வைத்திருப்பாளோ அடுப்படியில்,
இன்றும் அங்கேயே வெந்து கொண்டிருக்கும் அம்மா...
என்றும் போல் இன்றும் அதே பழைய சலவை வேஷ்டியில்,
பட்டாசில் இருந்து propertyயை பாதுகாக்கும் அப்பா...
என் வீட்ல தான் நிறைய பட்டாசு பேப்பர்,
பெருமையுடன் முடியும் தீபாவளி...
இன்று வெறுமையுடன் முடிகிறது...
தீபாவளியை கொண்டாடுவோம்...அதே நினைவுகளோடு...